இறக்குமதி செய்யப்பட்ட 750 தொன்னுக்கும் அதிகமான கோதுமை மா மனித நுகர்வுக்கு பொருத்தமற்றதாக கண்டுபிடிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு கிடைத்த தகவலின்படி, வத்தளையின் உஸ்வெட்டகேயாவ பகுதியில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
மனித நுகர்வுக்கு தகுதியற்ற 750 தொன்களுக்கும் அதிகமான கோதுமை மா, சந்தைக்கு வெளியிட தயாராக இருந்தது, 3,000 பொட்டலங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவற்றின் உற்பத்தி திகதி கடந்த ஆண்டு, மே மாதம் என்றும், காலாவதி திகதி இந்த ஆண்டு மே மாதம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பூச்சிகள் அதிகமாக இருந்ததால், சந்தைக்கு விற்பனை செய்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.