மண்சரிவு அபாய எச்சரிக்கை
தற்போது நிலவும் மழையின் காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கண்டி, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாயம் இன்று (24) காலை 7.30 மணி முதல் நாளை காலை 7.30 மணி வரை அமுலில் இருக்கும் எனவும், அந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.