நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீத அதிகரிப்பு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்களின் தற்போதுள்ள மட்டத்தை அதிகரிக்காமல் அல்லது மாற்றியமைக்காமல் பேண தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டம் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது. இதன்போது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதங்களை (SLFR) முறையே 14.50 வீதம் மற்றும் 15.50 வீதமாக தற்போதைய மட்டத்தில் மாற்றியமைக்காமல் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.