இரட்டைக் குடியுரிமை
இரட்டைக் குடியுரிமையை பெறுவதற்காக 2021 ஆம் ஆண்டில் 5,401 பேர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அவர்களில் பெரும்பான்மையானவர்கள் அவுஸ்திரேலியாவில் வசிப்பவர்கள் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, அவுஸ்திரேலியாவில் வசிக்கும் 1,621 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கிடையில், ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த 885 பேரும், அமெரிக்காவைச் சேர்ந்த 795 பேரும், கனடாவைச் சேர்ந்த 371 பேரும், இத்தாலி, சுவிட்சர்லாந்து, சுவீடன், நியூசிலாந்து, பிரான்ஸ் மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளைச் சேர்ந்த பலரும் இரட்டைக் குடியுரிமைக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
அதன்படி, அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜ தந்திர கடவுச்சீட்டு
கடந்த 2021 ஆம் ஆண்டில் 382,560 கடவுச்சீட்டுகளையும், 398 இராஜ தந்திர கடவுச்சீட்டுகளையும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அதிகரிப்பு என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டில் 209,411 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாகவும், அந்த ஆண்டில் வழங்கப்பட்ட இராஜதந்திர கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 175 என்றும் அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.