மார்ச் மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் 55 வீதத்தால் கணிசமான அளவு வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2022 பெப்ரவரியில் 205 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த இலங்கைக்கான பணம் அனுப்பும் வருமானம் மார்ச் 2022 இல் 113 மில்லியன் அமெரிக்க டொலர் அதிகரித்து 318 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
இதேவேளை, கடந்த ஆண்டுமார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது, பணம் அனுப்பும் வரவுகள் 48 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணம் 612 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.