சீனாவிலிருந்து சேதன பசளையை இறக்குமதி செய்யப்போவதில்லை என, விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
பெரும்போக நெல்லுற்பத்திக்காக, முன்னதாக சீனாவிலிருந்து சேதன பசளை இறக்குமதி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்காக சில பசளை மாதிரிகளும் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தன.
குறித்த பசளை மாதிரிகள் தொடர்பில் விவசாயத்துறை நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், குறித்த பசளை இலங்கையின் மண்வளத்துக்கும், காலநிலைக்கும் பொருத்தமற்ற நுண்ணுயிரிகள் காணப்படுவதாகக் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, சீனாவிலிருந்து சேதன பசளையை இறக்குமதி நிறுதப்பட்டால், பெரும்போக நெல்லுற்பத்திக்காக பசளையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, விவசாயத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.