அடுத்த ஆறு மாதங்களுக்குள் கொரிய வேலைகளுக்கு தகுதி பெற்றுள்ள 5,800 பேர் உள்வாங்கப்படுவார்கள் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொரிய மனிதவளத் திணைக்களத்தின் பணிப்பாளரும் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியுமான லீ சூ சுல் உன் நடத்திய கலந்துரையாடலின் போது இது தொடர்பில் அவர் உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்
அடுத்த வாரத்தில் இருந்து ஒவ்வொரு வாரமும் 200 இலங்கைப் பணியாளர்கள் கொரியாவுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும், அதன் பின்னர் வாரத்திற்கு இரண்டு விமானங்களாக அதிகரிக்கப்படும் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும், கொரிய தொழில் வாய்ப்புகளில் அதிகமானவற்றை இலங்கைக்கு வழங்குமாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார விடுத்த கோரிக்கையும் கொரிய மனிதவளத் திணைக்களத்தின் இலங்கை வதிவிடப் பிரதிநிதியிடம் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.