நாட்டில் எந்தவொரு பகுதியிலும் வன்முறைச் செயற்பாடுகள் இடம்பெற்றால் அது தொடர்பில் தகவல் தெரிவிக்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
பல்வேறு தரப்பினரால் பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், தீ வைத்தல், சொத்துக்கள் கொள்ளையிடுதல், தாக்குதல் நடத்துதல் போன்ற பல்வேறு வன்முறைச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கும், வன்முறையாளர்களை அடையாளம் காண்பதற்காகவும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, 076 739 39 77 அல்லது 011 244 11 46 ஆகிய இலக்கங்களுக்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தகவல் வழங்க முடியும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், 118 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கும் வன்முறைச் செயற்பாடுகள் தொடர்பில் அறிவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு அருகில் ஏற்பட்ட அமைதியின்மையின்போது, இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்படி, 011 24 22 176, 011 23 20 145, 071 85 92 087, 071 85 94 942 மற்றும் 071 85 94 901 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு இது தொடர்பான தகவல்களை குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.