சம்பள பிரச்சினைக்கு தௌிவான தீர்மானமொன்றை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கேட்டுள்ளன.
அவ்வாறு தீர்வு வழங்காவிடின் தங்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் வரை இணைய வழி கற்பித்தல் செயற்பாடுகளிலிருந்து விலகியிருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதேவேளை, மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோட்டை ஶ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்கத்தின் மகாநாயக்கர் இத்தேபான தர்மாலங்கார தேரரினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.