சுகாதார சேவையாளர்கள் இரண்டாம் நாளாக இன்று (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தாதியர், இடைநிலை வைத்தியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் நேற்று (24) முதல் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளன.
வேதனம் மற்றும் கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பணிப்புறக்கணிப்பு காரணமாக நேற்று வைத்தியசாலைக்கு சென்றிருந்த நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.