பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இடைக்கால வரவு-செலவுத்திட்ட அறிக்கை எதிர்வரும் 08ம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பொருளாதார நெருக்கடியின் தீவிரம் காரணமாக கடந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத்திட்டத்திற்குப் பதிலாக புதிய இடைக்கால வரவு – செலவுத்திட்டமொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார்.
குறித்த இடைக்கால வரவு – செலவுத்திட்ட அறிக்கையில் அபிவிருத்தித் திட்டங்கள் ரத்துச் செய்யப்பட்டு, கல்வி மற்றும் சுகாதாரம் போன்றவற்றுக்கு மட்டுமே கூடுதல் நிதி ஒதுக்கப்படவுள்ளது.
அத்துடன் பொதுமக்களின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கும் நிவாரணத்திட்டங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு எதிர்வரும் ஏழாம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அன்றைய தினம் ரணில் விக்ரமசிங்கவின் இடைக்கால வரவு – செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு, எட்டாம் திகதி மாலை வரை நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.