இலங்கையின் புதிய பிரதமராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சற்று முன்னர் பதவியேற்றுள்ளார்.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
அதன்படி, இலங்கை வரலாற்றில் மூன்றாவது பெண் பிரதமர் இவராவார்.