ஜனாதிபதி செயலகத்தின் நுழைவாயில்களை மறித்து, கூடாரங்களை அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி செயலகத்தின் லோட்டஸ் மார்க்கத்தின் இரு பிரதான நுழைவாயில்களையும் மறித்து, கூடாரங்கள் அமைத்து, காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னெடுத்த போராட்டம் காரணமாக அதனை அண்டிய பகுதிகளில் இன்று காலை போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து குறித்த கூடாரங்களை அகற்றும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்த நிலையில், அந்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஆர்ப்பாட்டம் காரணமாக முடக்கப்பட்டிருந்த கொழும்பு – லோட்டஸ் சுற்றுவட்டம் பகுதியில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.