அரச ஊழியர்களின் சம்பளத்தை நிவாரண வரவு- செலவுத்திட்டத்தின் ஊடாக அதிகரிப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
வாழ்க்கைக்கு செலவு அதிகரித்துள்ள நிலையில், ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க இந்த தீர்மானத்தை பிரதமர் எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2015ம் ஆண்டு அரசாங்கத்தினால் அரச ஊழியர்களுக்கு 10000 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்பட்டது.
இதன்படி, வாழ்க்கை செலவு அதிகரிக்கப்பட்டுள்ளதை கருத்திற் கொண்டு, அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு, வரவு – செலவுத்திட்டத்தை தயாரிக்கும் குழுவிற்கு, பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்துடன், அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பிற்கு ஏற்றவாறு, தனியார் துறையினரது சம்பளத்தை அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, வரவு -செலவுத்திட்டத்தை தயாரிக்கும் குழுவிற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.