தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதையடுத்து குறித்த புயலுக்கு “மோக்கா“ எனவும் பெயரிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மோக்கா புயல், வடக்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று தீவிர புயலாக மாறும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று காலை தீவிரப் புயலாகவும், நள்ளிரவில் மிகத் தீவிரப் புயலாகவும் வலுவடைந்து, தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.
தொடர்ந்து, வடக்கு-வட கிழக்கு திசையில் திரும்பி, மே 13 முதல் வலு குறைந்து, மே 14-ம் திகதி காலை தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையைக் கடக்கக் கூடும்.
அப்போது காற்றின் வேகம் மணிக்கு 110 முதல் 120 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 130 கிலோமீட்டர் வேகத்திலும் இருக்கும். இதன் காரணமாக மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்தமான் கடல் பகுதி, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதி, தென் மேற்கு, மத்திய கிழக்கு, மத்திய மேற்கு, வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசும்.
எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் அடுத்த 3 நாள்களுக்குச் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை நிலையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.