பொகவந்தலாவை தெரேசியா தோட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரின் சடலங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பொது மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்த கொலிஸார் சடலங்களை மீட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட பெண் சிறிது காலம் கொழும்பு பகுதியில் தொழில் செய்து வந்ததாகவும் தனது வீட்டுக்கு வருகை தந்து நான்கு நாட்கள் கடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
இருவரின் சடலங்களும் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.