செனன் தோட்டத்தில் தீ விபத்து
ஹட்டன் – செனன் தோட்டத்தில் கே.எம்.பிரிவில் திங்கட்கிழமை (03) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 20 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளது.
இந்த குடியிருப்புகளில் இருந்த 20 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த குடியிருப்புகளில் ஏற்பட்ட தீயினை சுமார் 3 மணித்தியாலயங்களுக்கு பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
எனினும், 20 வீடுகளில் இருந்த பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன.
பரவிய தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்தவர்களில் 5 நபர்கள் சிறு சிறு தீ காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுள்ளமையும் குறிப்பிடதக்கது.
சீனர்கள், ஜப்பானியர்கள் ஏன் இரவில் குளிக்கிறார்கள் தெரியுமா?
எனினும் இந்த தீ விபத்தினால் லயன் தொகுதியில் அமைந்திருந்த 20 வீடுகள் சேதமடைந்ததுடன், இந்த வீடுகளில் குடியிருந்த 20 குடும்பங்களை சேர்ந்த 50 பேரை தற்காலிகமாக மாற்று இடங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை. ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டார் ஜீவன்
ஹட்டன் செனன் தோடத்தில் தீ விபத்துக்குள்ளான குடியிருப்புக்களையும், பாதிக்கப்பட்ட மக்களையும் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் சென்று பார்வையிட்டு தேவையான உதவிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடியதுடன், தோட்ட நிர்வாகத்துடன் கலந்துரையாடி தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார்.
குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கான தங்குமிட வசதி, அத்தியாவசிய தேவைகள் உட்பட உலர் உணவுப் பொருட்கள் அனைத்தையும் வழங்குமாறு தோட்ட நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டிருந்தார்.
எனவே இது தொடர்பில் குறித்த தோட்டப்பகுதிக்கான பெருந்தோட்ட யாக்கத்திடம் பேசி அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக தோட்ட நிர்வாகத்தினர் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அவர்களிடம் தெரிவித்தனர்.
மேலும் இந்த தீ விபத்து தொடர்பில் இன்று( 04) இடம்பெறவுள்ள நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலும், பாராளுமன்றத்திலும் பேசி அவர்களுக்கான உரிய தீர்வினையும் பெற்றுத்தருவதாக தெரிவித்திருந்தார்.