மோசடியாக தொலைபேசி அழைப்புகள், குறுந்தகவல், மின்னஞ்சல் மற்றும் சமூக வலைத்தளங்களில் ஊடாக மக்களை ஏமாற்றும் மோசடி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறான மோசடிகள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ள நிலையில், அது குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவுத்தியுள்ளது.
மேலும், வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் தொடர்பாக அல்லது மதிப்புமிக்க பொருட்களைக் கொண்ட பொதிகளை பெறுவதற்கு சுங்கக் கட்டணம் செலுத்துமாறு பொதுமக்களிடம் மோசடிக்காரர்கள் கேட்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தனிப்பட்ட இரகசிய தகவல்களை எந்தவொரு மூன்றாம் தரப்பினருடனும் பகிரக்கூடாது என்று இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறான, தொலைபேசி அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகளை நீங்கள் பெற்றால் 011-2477125 அல்லது 011-2477509 என்ற தொலைபேசி எண்ணிற்கு அறியத்தருமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.