அவிசாவளை- கேகாலை பிரதான வீதியின் கொட்டபொல பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ், வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதில், எட்டு பேர் காயமடைந்து கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிந்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் பேருந்தின் சாரதி மற்றும் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட 8 பேர் கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.