கொழும்பிலிருந்து மஸ்கெலியாவுக்கு சென்ற இலங்கை போக்குவரத்து சபை அவிசாவளை டிப்போவுக்கு சொந்தமான பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
நோட்டன் பிரிட்ஜ் தியகல வீதியில் செவ்வாய்க்கிழமை ( 02)காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் கூறியுள்ளனர்.