வெப்பத்தினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை தவிர்ப்பதற்காக சுகாதார மேம்பாட்டு பணியகம் பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அத்துடன், அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு பணியகம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவுறுத்தியுள்ள சில வழிமுறைகள்
- தாகம் ஏற்படும் வரை காத்திருக்காமல் தொடர்ச்சியாக நீர் மற்றும் இளநீர் போன்றவற்றை அருந்தவும்
- தாகத்துக்கு சோடா போன்ற பானங்களை அருந்துவதை தவிர்க்கவும்
- பயணிக்கும் போது அருந்துவதற்கு போதுமான நீரை உங்களுடன் வைத்திருக்கவும்
- முற்பகல் 11 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை வெளியில் செல்வதை குறைத்துக்கொள்ளவும்.
- வெயில் காலத்துக்கு ஏற்ற பருத்தி ஆடைகளை அணியவும்
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM – இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/SeithiLK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.