ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 35 ரூபாயால் அதிகரித்துள்ளதாக நாட்டிலுள்ள இரண்டு பிரதான மா விநியோகஸ்தர்கள், நேற்று (18) அறிவித்துள்ளனர்.
கோதுமை மாவின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பேக்கரி உரிமையாளர்கள் தொழிலில் ஈடுபட முடியாமல் தவித்து வருவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மாவின் விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த வாரம் அனைத்து பேக்கரிகள் மற்றும் ஹோட்டல்கள் சகல உற்பத்திகளையும் நிறுத்தும் என சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.
பேக்கரி உற்பத்திகளுக்கான அனைத்து மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக சிறு மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரிகள் பெருமளவு உற்பத்தியை முற்றாக நிறுத்தியுள்ளன என்று சுட்டிக்காட்டினார்.
4000 ரூபாய்க்கு குறைவாக இருந்த மா மூடை 12,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் 37.5 கிலோ எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 20,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கையின் கோதுமை மாவுக்கான தேவையில் 30 சதவீதத்தை வழங்கும் நிறுவனம் ஒரு கிலோ கிராம் மாவின் விலையை 35 ரூபாவினால் அதிகரித்துள்ளது என்றும் பல நிறுவனங்களுக்கு மாவின் விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் எனவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.