நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதி ஆலோசகர் பதவியில் இருந்து விலகிய பேராசிரியர் ஆஷு மாரசிங்கவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 31ஆம் திகதி மீண்டும் அதே பதவிக்கு நியமித்துள்ளார்.
சமீபத்தில், ஆஷு மாரசிங்கவின் காதலியான ஆதர்ஷா கரதனாவின் வளர்ப்பு நாயை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 23ம் திகதி பேராசிரியர் ஆஷு மாரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்தார்.
இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, ஆதர்ஷ கரந்தனவுடன் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கொண்டதுடன், ஆஷு மாரசிங்க மிருகத் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தியிருந்தார்.
ஹிருணிகா பிரேமச்சந்திரவிடம் 500 மில்லியன் ரூபாயும், ஆதர்ஷ கரதனவிடம் ஒரு பில்லியன் ரூபாயும் கோரி இடைக்கால மேன்முறையீட்டை ஆஷு மாரசிங்க தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது