காலி முகத்திடலில் நிலவி வரும் அமைதியின்மையை தொடர்ந்து ஸ்தலத்திற்கு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் விரைந்துள்ளனர்.
இன்று முற்பகல் அலரி மாளிகை அருகில் அரச ஆதரவாளர்களால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு அமைதியான முறையில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து காலி முகத்திடலுக்கு விரைந்த அரச ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள், அங்கிருந்த கூடாரங்களை தகர்த்தெறிந்து கலக செயல்களில் ஈடுபட்டிருந்தனர்.
இதனால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டு நிலைமை தீவிரமடைந்தது.
கலகக்காரர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகங்களை முன்னெடுத்தனர்.
இதேவேளை இந்த மோதலில் காயமடைந்த 9 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது நிருபர் தெரிவித்தார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.