நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யும் என எதிர்வு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டின் ஏனைய சில பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓரளவு பலத்த காற்றும், இடி மின்னல் தாக்குதல்களும் இடம்பெறும் சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.