துமிந்த சில்வா ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், துமிந்த சில்வாவை கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட துமிந்த சில்வாவை மீண்டும் கைது செய்யுமாறு உயர்நீதிமன்றம் நேற்றைய தினம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
அத்துடன், ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இடைநிறுத்தி, உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.
சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கு அமைய, இந்த விவகாரத்தில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தை செயற்படுமாறும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.