நாடாளுமன்றத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து தீர்மானிப்பதற்காக நாடாளுமன்ற அலுவல்கள் குழுவின் விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 8ஆம் திகதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், கூட்டங்களை நடத்தும் விதம் மற்றும் முன்மொழிவுகள் குறித்து விவாதிக்கப்படும் என நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் பிரகாரம், ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு அண்மையில் நிறைவடைந்தது.
இந்நிலையில், நாடாளுமன்றம் எதிர்வரும் 8ஆம் திகதி மீண்டும் கூட்டப்படவுள்ளது. கோப் மற்றும் கோபா உள்ளிட்ட ஏறக்குறைய எழுபது குழுக்கள் நாடாளுமன்றம் முடிவடைந்த பின்னர் செயலிழந்துள்ளன.
நாடாளுமன்றம் திறக்கப்பட்ட பின்னர் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டு விரைவில் குழுக்கள் நியமிக்கப்படும் என நாடாளுமன்ற பிரதி செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.