தனிமைப்படுத்தல் விதிமுறைகைளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 94 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
2020 ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக மொத்தம் 80,654 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை மேல் மாகாணத்தின் எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள 13 உள் நுழையும் மற்றும் வெளியேறும் சோதனைச் சாவடிகளில் நேற்றைய தினம் மொத்தமாக 1,414 வாகனங்களில் பயணித்த 2,258 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவர்களில் உரிய காரணமின்றி 186 வாகனங்களில் பயணித்த 317 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.