Friday, April 19, 2024
Homeதேசியசெய்திகள்ஊழியரை தரையில் அடித்த இருவரை தட்டி தூக்கிய பொலிஸார்

ஊழியரை தரையில் அடித்த இருவரை தட்டி தூக்கிய பொலிஸார்

HTML tutorial

மீகொடை பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியர்கள் இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (06) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர், முகக்கவசம் அணியாது எரிபொருள் நிரம்புமாறு கோரியுள்ளார்.

இதன்போது, முகக்கவசம் அணியுமாறு கூறிய எரிபொருள் நிலைய ஊழியரிடம் கோப்பட்ட சந்தேக நபர், அங்கிருந்து சென்று மற்றுமொரு நபரை அழைத்து வந்துள்ளார்.

இதனையடுத்து, எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியரை இருவரும் சேர்ந்து கடுமையான முறையில் தாக்கியமை அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

அத்துடன், அவர்களில் ஒருவர் ஊழியரை தரையில் அடித்து தாக்கியதுடன், அதனை தடுத்த மற்றுமொரு ஊழியரையும் அவர்கள் தாக்கியமை அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது.

இதனையடுத்து, 24 மற்றும் 36 வயதுடைய சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

காயமடைந்த ஊழியர், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

RELATED ARTICLES

இதயும் பாருங்க

இதயும் பாருங்க

சற்று முன்