கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட 18 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
அத்துடன் குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்காக தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.