இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பும் போது சட்டபூர்வமான முறைகளை பின்பற்றுமாறு மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், உண்டியல் முறை போன்ற சட்டவிரோத வழிகளில் பணம் அனுப்பினால் இங்கே பணத்தை பெற்றுக்கொள்பவர்களே பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ள நேரிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(12) நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.