விலங்குகள் நல சட்டமூலத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கால்நடை நலனோம்புகை சட்டமூலத்தை தயாரிக்கும் நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்வதற்காக 2020 ஒக்ரோபர் மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் விவசாய அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.