வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக இதுவரை அரசாங்கம் தீர்மானம் மேற்கொள்ளவில்லை என, ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்ட கருத்தினை அடிப்படையாகக் கொண்டு வெளியாகி வரும் தகவல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.