கலாவெவ தேசிய பூங்காவில் முக்கோண காதல் காரணமாக இரண்டு யானைகளுக்கு இடையில் இடம்பெற்ற சண்டையில் “பரண தல பூட்டுவா”எனும் யானை படுகாயமடைந்துள்ளது.
கெக்கிராவ மிரிஸ்வத்த காட்டுப்பகுதியில் படுகாயமடைந்த நிலையில் இருந்த அந்த யானைக்கு மயக்க மருந்து செலுத்தி, சிகிச்சை அளிக்கப்பட்டதாக கனேவல்பொல வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
அநுராதபுரத்தைச் சேர்ந்த பந்துலகம வனவிலங்கு வைத்தியர் சந்தன ஜயசிங்க உள்ளிட்ட கால்நடை வைத்தியர்கள் குழு கனேவல்பொல வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளின் உதவியுடன் சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சில நாள்களுக்கு முன்னர் இந்த சண்டை ஏற்பட்டதாகவும், அடையாளம் தெரியாத யானை, “பரண தல பூட்டுவா” தந்தங்களால் கடுமையாக தாக்கியுள்ளது. இதனால், உடலின் பல பாகங்களில், தந்தங்களால் குத்தப்பட்டதால் ஏற்பட்ட காயங்களுக்கான அடையாளங்கள் உள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
காயமடைந்த , “பரண தல பூட்டுவா” யானையின் ஜோடி தந்தங்கள் ஒன்றுடன் ஒன்று பின்னி, எக்ஸ் வடிவில் இருப்பதனால், யானைக்கு சண்டையிடுவது கடினமாக இருந்துள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.