இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களால் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களையும் பாராளுமன்ற செய்தி சேகரிப்புக்கு அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.
கொரோனா அதிகரித்ததன் காரணமாக, ஒவ்வோர் ஊடக நிறுவனத்திலிருந்தும் ஊடகவியலாளர் ஒருவர் மாத்திரமே பாராளுமன்ற அமர்வுகளின் போது, செய்திகளை சேகரிப்பதற்கு அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், இரண்டு தடுப்பூசி டோஸ்களையும் பெற்ற அனைத்து ஊடகவியலாளர்களும் பாராளுமன்ற அமர்வுகளில் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படவுள்ளனர் என்றார்.
பராளுமன்ற செய்தி சேகரிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் வரவு- செலவுத் திட்ட முன்மொழிவுகள் சமர்ப்பிக்கும் சந்தர்ப்பம் மற்றும் வரவு-செலவுத் திட்ட விவாத செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்று பாராளுமன்ற
அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா பரவுவதைக் குறைப்பதைக் கருத்தில் கொண்டு ஊடகவியலாளர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.