மட்டக்குளி, பொக்குனுவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற நத்தார் பண்டிகை விருந்தின் போது வாள்வெட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் மது அருந்திவிட்டு கிறிஸ்மஸ் பண்டிகைக்காக நண்பர்களுடன் விருந்தில் ஈடுபட்டதாகவும், அங்கிருந்த இளைஞர் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த இளைஞனை கத்தியால் குத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். மட்டக்குளிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.