கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்றைய தினம் 10 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
முற்பகல் 10 மணி முதல் இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அம்பத்தலை நீர்விநியோக நிலையத்தின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.
இதன்படி கொழும்பு, தெஹிவளை, கல்கிஸை, கோட்டே, கடுவளை மாநகர சபை, மஹரகம, பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், கொலன்னாவை நகர சபை, கொட்டிகாவத்தை, முல்லேரியா, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளுக்கும் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.