நுவரெலியா கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் ஏற்பட்ட பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை ஞாயிற்றுக்கிழமை (11) இரவு பிரதமர் ஹரிணி அமரசூரிய , கம்பளை வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன் போதுஅங்கு சென்ற பிரதமர் காயமடைந்தவர்களின் நலத்தை விசாரித்ததோடு வைத்தியசாலையில் செயலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சைகள் மற்றும் வசதிகள் குறித்து ஆராய்ந்தார்
இதேவேளை, அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும் சென்றிருந்தார். சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய இது போன்ற வாகன விபத்துக்களால் ஒவ்வொரு வருடமும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன
இது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது என்பது எமக்கு தெரியும் இதனை தடுப்பதற்கு போக்குவரத்து அமைச்சர் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார் என தெரிவித்தார்.