சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கூரிய ஆயுதங்களுடன் சந்தேக நபர்கள் ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நிட்டம்புவ, அத்தனகல்ல பகுதியில், இரண்டு வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சந்தே நபர்கள் நேற்று(29) மாலை கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
21, 22 மற்றும் 24 வயதுடையவர்களே கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை அத்தனகல்ல நீதிமன்றில் இன்று(30) முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.