கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பினால் நேற்று (12) ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு இரண்டாவது நாளாக இன்று (13) தொடர்கிறது.
அரச நிர்வாக அமைச்சின் செயலாளருடன் நேற்றைய தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக இரண்டாவது நாளாக இந்த வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் நிர்வாக கிராம உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்த ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெகத் சந்திரலால் தெரிவித்தார்.