காட்டு யானைகளின் தாக்குதல்களுக்கு இலக்காகி கடந்த வருடம் 127 பேர் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் கூறியுள்ளது.
அத்துடன், கடந்தாண்டு ரயில் மோதி உள்ளிட்ட காரணங்களினால் 360 யானைகள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், 50 சதவீதமான யானைகளின் மரணங்கள் மனிதர்களின் செயற்பாடுகள் காரணமாகவே நிகழ்ந்துள்ளன.
அதன்படி, சுமார் 200 யானைகள் மனிதர்களின் செயற்பாடுகள் காரணமாக மரணித்ததாகத் தெரியவந்துள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.