அயகம, மாவத்தஹேன, பியம்புர பகுதியில் பெண் ஒருவர் தனது கணவரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
தாக்குதலில் உயிரிழந்தவர் கோனார முதியன்சேலையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான 37 வயது தயா நிஷாந்தி ஹரிச்சந்திர என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின்போது, கனமான பொருளினால் குறித்த கணவர் மனைவியின் தலையில் தாக்கியதையடுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்தேக நபரான கணவர் திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணும் அவரது கணவரும் தமது இரண்டு வயது மகனுடன் ஜனவரி 15 ஆம் திகதி குறித்த வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்துவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
தினக்கூலிகளாக வேலை செய்து வந்த குறித்த தம்பதியினர் முன்னதாக குருநாகல் மற்றும் கலவான பிரதேசங்களில் வசித்து வந்துள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.