அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக அதிகரிப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனின் கையொப்பத்துடன் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
2022 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், அரச ஊழியர்களின் ஓய்வுபெறுவதற்கான வயது வயது 60இல் இருந்து 65 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான – செலவுத் திட்டத்தின் பிரகாரம் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
பின்னர், அது தொடர்பான சட்டமூலம் நவம்பர் மாதத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.