இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டவர்களை இன்று (04) சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்த கலந்துரையாடல்கள் கொழும்பில் இடம்பெறவுள்ளன.
இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரையும் இந்திய வெளிவிவகார செயலாளர் சந்திக்கவுள்ளார்.
இதேவேளை, இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லாவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சந்திப்பு கொழும்பில் இன்று(05) மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன், தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதிநிதிகளையும் அவர் சந்திக்கவுள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.