நேற்று(18) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு பெட்ரோலிய கூட்டுதாபனம் தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில், ஒரு லீட்டர் 92 ரக ஒக்டேன் பெட்ரோலின் விலை 84 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை 338 ரூபாவாகும். ஒரு லீட்டர் 95 ரக ஒக்டேன் பெட்ரோலின் விலை 90 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை 373 ரூபாவாகும். ஒரு லீட்டர் டீசலின் விலை 113 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை 289 ரூபாவாகும். ஒரு லீட்டர் சுப்பர் டீசலின் விலை 75 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 329 ரூபாவாகும்.
இந்நிலையில் மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி, கார், வேன் மற்றும் ஜீப் வண்டிகளுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு விதிக்கப்பட்டிருந்த வரையறை நேற்று(18) முதல் நீக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, லங்கா IOC நிறுவனம் நேற்று முன்தினம்(17) நள்ளிரவு முதல் அமுலாகும் வரையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்திருந்தது.
அதனடிப்படையில், ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 35 ரூபாவினாலும் ஒரு லீட்டர் டீசலின் விலை 75 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.