- Advertisement -
பாகிஸ்தானில் கடந்த வெள்ளிக்கிழமை (03) கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்ப நலனுக்காக நன்கொடை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, அவரது மனைவி மற்றும் பிள்ளைகளின் நலனுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊழியர் நலன்புரி நிதியத்திலிருந்து 2.5 மில்லியன் ரூபாயை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கான பிரேரணையை தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சமர்பித்திருந்தார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.