நோய் நிலைமைகள் காணப்படுமாயின் தங்களது பிள்ளைகளை பரீட்சை நிலையங்களுக்கு அனுப்ப வேண்டாமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏதேனும் நோய் அறிகுறிகள் காணப்படும் பரீட்சார்த்திகளை , வைத்தியசாலைகளை அண்மித்து தயார்படுத்தப்பட்டுள்ள விசேட பரீட்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பரீட்சைகளின் போது உரிய சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்பட வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன தெரிவித்துள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.