ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று(06) மாலை விசேட அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது.
இதில், பிரதமர் உள்ளிட்ட அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி, பொது நிர்வாக முடக்கல் போராட்டம் உட்பட நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் குறித்து, அமைச்சர்கள் இதன்போது கருத்துக்களை முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற பெரும்பான்மை பலம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் 113 என்ற பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் நபருக்கு பிரதமர் பதவியை வழங்க வேண்டி ஏற்படும் என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை, தமது பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியின் இந்தத் தீர்மானத்திற்கு அமைச்சர்கள் சிலரும் ஆதரவளித்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு எவ்வித கோரிக்கையையும் முன்வைக்கவில்லையென பிரதமர் உறுதிப்படுத்துவதாக பிரதமரின் ஊடக செயலாளர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பிரதமர் பதவியில் இருந்து விலக மஹிந்த தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.