- Advertisement -
திட்டமிட்டப்படி இன்றைய தினம் சுகவீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புதிய பொதுமுகாமையாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌம்ய குமாரவடு தெரிவித்துள்ளார்.
இதற்கு இணையாக இன்று (18) முற்பகல் 10 மணியளவில் இலங்கை மின்சார சபையின் பிரதான காரியாலயத்திற்கு முன்பாக அமைதியான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.