மஹரகம, நாவின்ன பிரதேசத்தில் காணாமல் போன 15 வயதுடைய சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் விவரங்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்த நிலையில், அதனையறிந்த சிறுமி தனது தாயாரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த சிறுமியின் தாய் பொலிஸாருக்கு இது தொடர்பில் அறியப்படுத்தியுள்ளார்.
அதன்படி, சம்பவம் தொடர்பில் பொலிஸார் சிறுமியிடம் வாக்குமூலம் பெற உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.